Wednesday 8 October 2014

எண்ணங்கள் !!

வேலை இருந்தால் நேரமும் மிச்சமில்லை 
நித்திரையும் வரவில்லை !
வலை பதிவிற்கும் வஞ்சனை பார்க்க வேண்டி உள்ளது !

பணம் மட்டுமே இருந்தால் 
பத்து பத்திரம் கூட
படுக்கையில் இருக்கும் பெற்றவர்களுக்கு 
பணிவிடை செய்து விடும் 
என இருக்கும் மனிதர்களுக்காக !!


அந்த பார்வையில் 
ஏக்கமோ,
ஏமாற்றமோ, 
எண்ணிப் பார்க்க முடியவில்லை !
ஆர்வமோ ,
ஆதங்கமோ, 
அறிய முடியவில்லை !
வறுமையிலும், 
வயதிலும், 
வறண்டு போன மனம், 
வருவாயை எதிர்பார்க்கவில்லை, 
வஞ்சனையில்லா பாசம் மட்டுமே !!!