Friday 28 March 2014

காதலே !!


எதிர்பார்ப்பில் சிறந்தது 
மனம் முழுதும் காதலுடன்

ஒருவரை நேசிப்பதே !!!


காரிருள் வேளையில்
கண்மூடும் நேரத்திலும் 
உன் முகம் மட்டுமே
என் விழிகள் 
எதிர்பார்த்து காத்திருக்கும் 
கண்ணவனனா கனவா
கனவில் மட்டுமல்ல ,
காலம் முடியும் வரையிலும் !!

Saturday 22 March 2014

அவனின் அவள் !!

காதலில் கரைந்த இருவரில் ,
ஒருவர் மரணமாக 
காதலியின் மனமோ அவன் வரமாட்டான் எனதெரிந்தும் 
காத்திருக்கிறாள் அவனின் நினைவுகளுடன் 
காதலுக்கு வயதுமில்லை 
மரணமானாலும் என்ற என்ன அலைகளுடன் அவனின் அவள் !!


வேகமாய்  நகரும்  நாட்கள் 
விந்தை  செய்ய  முடியா வண்ணங்களில் 
வகை  வகையான  மலர்கள்  
வாகை  சூட  வரும் வேளை எண்ணி 
வெண்பனி  காலத்திலும்  உன்னை  நினைத்து 
வளர்ந்து  கொண்டிருக்கின்றன  ,
உன்னை  காணும்  ஆவலில் ,
உன்னிடம்  மாலையாகும்  ஏக்கத்தில்  !!
வெயில்  காலத்தில்  வெறிக்கும்  பார்வையில் 
விடைபெற்று  சென்றாய் 
நீ வரும்  நாளுக்காக  வீசும்  அனலிலும் 
உன்னை வரவேற்க   
வஞ்சனை  பாராமல்  விதைகள் தூவினேன் !!
மொட்டு  வெடித்து  மலராகும்  பருவம்  போய் 
மலர்  உலர்ந்து  சருகான  போதும்  நீ  வரவில்லை  !
வீசும் காற்றில் கலந்த நீ 
வரமாட்டாய்  என்றாலும்  
மண்ணாகி  போன  உனக்கு  நான்  உரமாகவது  இருப்பேன் ,
விருப்பமற்ற வாழ்க்கையிலும்,!
உன் வரவை எண்ணி நாட்களை நகர்த்துவேன் ,
என்  காதலில்  தோற்கவில்லை  என்றுரைப்பதற்காக!!

Tuesday 18 March 2014

காலஞ்சென்ற கன்னிகைக்காக!!

பெண்களை மதியுங்கள்,மிதியாதீர் !!
காரணமில்லாமல் காளனால்(மானிடன் ஒருவனால் )

பழிவாங்கப்பட்ட ஒரு பெண்ணுக்காக !!

வரைவுகள் இல்லா,
வசைகள் இல்லா, 
வசதிகள் பாரா,
வயோதிகம் எண்ணா ,
வேகம் குறையா,
வருங்காலம் நோக்கி ஓடும்
வாலிபா !
நேரம் காலம் பாரா
உழைக்கிறாய்,
உன் வீட்டு மாந்தர்தம் மேன்மைக்காக! 
உன் வீரம் காட்ட
வேசியையும் தேடுகிறாய் , 
உன் கேளிக்கையை சகிக்கும்
பெண்ணையும் நாடுகிறாய் !
உன்னை புகழ்வதா ?
இல்லை இகழ்வதா?
விபரீதமறியாமல் செய்தாயா
இல்லை
வீராப்புக்காக செய்தாயா ?
தெரியவில்லை !
விலைபோனது உயிர் 
மட்டுமே !
சுதந்திரக்காற்று அலைமோதுகிறதாம்,
கூறுகிறார்கள் சொற்பொழிவளர்கள்
மேடைபேச்சுக்காக!
வாழ்க்கை என்னும் நாடகமேடைக்கல்லவே?

Thursday 13 March 2014

மலரே !!

மலரின் வாசனையில்
நாம் மிதக்கிறோம் 
மலருக்கு என்ன கவலையோ ?

கேட்போம் என்ன தான் என்று !!!

வஞ்சிக்காதே மலரே ,
வண்ணங்கள் பல கொண்டு
வானின் வானவில்
வனத்தில் வந்ததை போல்
என் மனதை கொள்ளை கொள்ளும்
வசீகர நறுமணத்தை கொண்டு
என்னை வசப்படுத்தும் நீ ,
வீணற்ற கோபம் கொண்டு
வாடிவிட்டாயே
ஏன்?
நான் உன்னை சூடியதாலா ?
இல்லை
உன் அமிழ்தத்திற்காகவே
ஏங்கும் வண்ணத்துப்பூச்சியின்
பசி தீர்க்காமல் வந்த வேதனையிலா ??

Monday 10 March 2014

கன்னியின் கள்வன் !!

உன் கரு விழி பார்வையில்
கரைந்தது என் உள்ளம் !
உன் முத்துக்கள் சிந்தும் சிரிப்பில்
முற்றும் மறந்தது என் சிந்தை !


காதலில் விழுந்தோர்,
         கவிகள் ஆகிவிடுவர் !!

காதலனின் நினைவில் காதலியின் எண்ணங்கள் இதோ ...


கால நேரம் பார்ப்பதில்லை
காதல் புரிய நேரமில்லை
கதை பேசும் சுற்றாருடன்
கண்கள் நிறைய ஆர்வத்துடன்
கவிதை தொடுக்க ஆரம்பித்தேன்
கண் முன்னே தெரியும் கயவர்களை பார்த்து !!
எங்கே என்னை கவர்ந்தவன்
கண்டு கொள்வானோ என்ற ஏக்கம் ..
திரும்ப வேண்டும் என்ற ஆவலுடன்
தேடினேன் திரை மறைவிலிருந்து !!
காரிருளில் மின்னும் மாணிக்கம் அவன் !
எட்டுத் திக்கும் தேடினாலும்
அவன் போல் யாரும் இல்லை !
ஆனால்
அன்று போல் இன்றும் விலகினான்
கடைக் கண் பார்வை மட்டும் போதுமென்று !
மருகினேன் ! கசிந்தேன் !
மனதில் பதிந்த அவன் நினைவுகள்
என் பிம்பம்
பாரம் பாராமல்
அவன் கரம் பற்றிய நாட்களை
கரை படாமல்
காதல் செய்கிறது
கனவிலே !

Sunday 9 March 2014

என்னுள் அவள்!!

காதல் - இந்த ஒரு வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள்
கலந்த உணர்வுகளின் பிரதிபலிப்பை வெவ்வேறு விதமாக காணலாம்.
கருவறையில் இருக்கும் குழந்தை மீதும் காதல்
கடைக்கோடியில் வாழும் கள்வன் மீதும் காதல்!
காதலுக்கு,
வயது வித்யாசமில்லை
மனம் ஒன்றே எல்லை !!


ஒரு காதலனின் உணர்வு இங்கே ..

அவள் சிணுங்கல்களை
சேகரிக்கிறேன்
சிதறாமல் இருக்க
மற்றவர் கவராமல் இருக்க !
அவளின் மகிமையை
போற்றுகிறேன்
மங்காமல் இருக்க
மற்றவர் கண்படாமல் இருக்க !!
அவளின் கேசத்தை
பேணுகிறேன்
மழுங்காமல் இருக்க
மற்றவர் நோக்காமல் இருக்க!!
அவளின் பண்பை
ரசிக்கிறேன்
வற்றாமல் இருக்க
மற்றவர் வசமாகாமல் இருக்க !!
அவளின் உரிமையை
கொண்டாடுகிறேன்
குறையாமல் இருக்க
மற்றவர் எதிர்பாராமல் இருக்க !!
அவளின் சுவாசத்தை
சுவாசிக்கிறேன்
சரியாமல் இருக்க,
மற்றவர் நேசிக்காமல் இருக்க !
என்னிலிருந்து விலகாமல் இருக்க !

 

Saturday 8 March 2014

Happy women's day!!!

நம் முகம் பார்க்க ஏங்கும் முதல் ஜீவன்
நம் கிறுக்கல்களையும் பெருமை படுத்தும் ஒரு ஜீவன்
நம் கோபங்களையும் சிரிப்பால் மறைக்கும் ஒரு ஜீவன்
பல அடைமொழிகள்
நம் வாழ்க்கை யின் நிகழ்வுகள் சுழல்வது
அம்மா என்ற ஒரு பெண்மணியின் மடியில் தான் !


இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!


மங்கையை ஏளனப்படுத்தாதீர் !
அவர்களின் மனம் அறிந்து
பெண்களை போற்றுவீர் !!


வார்த்தைகளை கோர்க்க முடியவில்லை
வசனமாக ..
அவள் மணிகள் அல்லவே
வர்ணிக்க வேண்டாமோ ?
மணிகள் சிதறிய ஒலி போல்
அவள் புன்னகை..
மதி மயங்க வைக்கும்
அவள் பாடல்கள் ..
மனதை வருடி ஏங்க வைக்கும்
அவள் அரவணைப்பு ..
எதிர்பார்க்காமல் அள்ளி கொடுக்கும்
அவள் அன்பு..
ஒரு நொடி பிரியா அவளின் உறுதி ..
ஏசினாலும் நேசிப்பவள் ..
கடிந்தாலும் காதலிப்பவள் ..
யோசிக்க தேவையில்லை
எங்கு சென்றாலும்
அக்கறை என்னும் நிழலாக
இருக்கும் அம்மா வே தான் !!

 

Thursday 6 March 2014

FIRST ENTRY:)

My First and my own blog:)Happy to be a part of this Blogging World!
when I started scribbling in the past, I never imagined that I would end up in creating a blog for all my scribbling. Being an amateur in writing,I might be wrong in expressing my opinions or views to others.Hopefully I might improve myself on this.Kindly apologize for that!
Let me mark my first entry into this world with my very own Tamil poetry:)

This one is about the accidents happening in and around me not because of train or bus, it's due to our carelessness.

வசந்தமான மாலை
வழக்கம் போல் நேரமின்மையினால்
விறுவிறுவென நடந்தேன்
விரைவு வண்டியை பிடிக்க !
விரைந்தோடித் தான்
பிடித்தேன் அன்று !!
விழி முழுக்க தூக்கம் !!
தாலாட்டு வேண்டுமல்லவா!
தலையணி கேட்பொறியை சொருகினேன்
கண்ணயர்ந்தேன் என் ஸ்தானம் வரும்வரை !
தடம் கடக்கையில்
தவறாமல் வரும் நினைவு,
விபரீதம் அறியாமல்
விலை போன உயிர்கள் பல
வேடிக்கையான செயல்களால் !
விதியை மாற்ற இயலாது ,
நெறியை பின்பற்றலாமல்லவா?
கழட்டினேன் தலையணி கேட்பொறியை
திருப்தியடைந்தேன்
என்னுள்!
திருத்த முயற்சிக்கிறேன்
சுற்றத்தை !!