Tuesday 18 March 2014

காலஞ்சென்ற கன்னிகைக்காக!!

பெண்களை மதியுங்கள்,மிதியாதீர் !!
காரணமில்லாமல் காளனால்(மானிடன் ஒருவனால் )

பழிவாங்கப்பட்ட ஒரு பெண்ணுக்காக !!

வரைவுகள் இல்லா,
வசைகள் இல்லா, 
வசதிகள் பாரா,
வயோதிகம் எண்ணா ,
வேகம் குறையா,
வருங்காலம் நோக்கி ஓடும்
வாலிபா !
நேரம் காலம் பாரா
உழைக்கிறாய்,
உன் வீட்டு மாந்தர்தம் மேன்மைக்காக! 
உன் வீரம் காட்ட
வேசியையும் தேடுகிறாய் , 
உன் கேளிக்கையை சகிக்கும்
பெண்ணையும் நாடுகிறாய் !
உன்னை புகழ்வதா ?
இல்லை இகழ்வதா?
விபரீதமறியாமல் செய்தாயா
இல்லை
வீராப்புக்காக செய்தாயா ?
தெரியவில்லை !
விலைபோனது உயிர் 
மட்டுமே !
சுதந்திரக்காற்று அலைமோதுகிறதாம்,
கூறுகிறார்கள் சொற்பொழிவளர்கள்
மேடைபேச்சுக்காக!
வாழ்க்கை என்னும் நாடகமேடைக்கல்லவே?

No comments:

Post a Comment