Thursday 28 September 2017

Adieu, Blogspot! Hey Wordpress!

Thank you very much for taking your time out and reading my blog.
This means a lot to me as whenever I open my blog, my eyes always stuck to the number of views:)
I know its so silly but it always gives me such a pleasure and happiness and motivation to write more in a better way.

Of late I could not post it here and started updating all my works in this below site:

My New Wordpress Blog

 Do read and let me know your feedback on my scribblings.

Thanks once again!

Happy Reading!

Life is once and Never forget to smile!

Priya Sakthivel.



Sunday 14 May 2017

அம்மா!

சுயநலமில்லா காதலியே, 
சிந்தனையை நிஜமாகும் அன்பே,
சிரமத்தை சிதறவைக்கும் நினைவே, 
சரிவை தாங்கும் தாரகையே ,
உணர்வுகளை உரித்தாக்கும் உயிரே ,
அடைமொழிகள் பல உண்டு உனக்கு
ஆனால் எங்கள் அன்பு மட்டும் ஒன்று!
அது உங்களுக்கு மட்டும் தான் - அம்மா :) 



Saturday 6 May 2017

விதை தூவிய
கைகள்
விடை தேடி
போராடுகிறது !
வினா எழுப்பிய
மேடை
பட்டிமன்றமில்லை,
அவையைக் கலைக்க !
நடுத்தெரு தான் !
நேற்று கழிந்த
பொழுதிக்கில்லை
இப்போராட்டம்,
நாளைய கனவுக்கு,
அடுத்த வேளை சோற்றுக்கு,
வரப்போகும் சந்ததிக்கு,
நம்மை தாங்கும்
வறளும் நிலத்திற்காகவும் தான் !
தவிர்க்கும் பதிலை
தலைமை நீ
நிராகரிக்க உரிமையுண்டு !
ஆனால்
மனிதர்களை கேளிக்கையாக்க
உரிமையில்லை !
நிவாரண அறிவிப்பு கொடுக்கும் தலைமைக்கு
நிர்வாணத்தின் வலி அறியாது போலும்!

P.S: என் அலமாரியிலிருந்து 

Thursday 23 March 2017

கலைந்த கனவு !!

வெற்று செங்காடாய் தொடங்கிய
அவனின் வாழ்க்கை
வேகமான அவளின் பரிவால்
வானவில்லாக மாறியது !!
விசித்ரமான அனுபவங்கள்
விந்தையான செயல்கள் !
வேடிக்கையான பேச்சுக்கள்!
வழக்கத்திற்கும் மாறாக
அவனை தீண்டும் வசந்தத்தை
வாரிக்கொண்டான் 
வண்ணமலர்கள் என்றெண்ணி!
அவ்வளவு பேரின்பம்
அவளுடன் இருந்தால் !
நிரந்தரமாகக்கூடாதா
நினைத்த நாழிகைகள் பலநூறு !!
நீரில் கரையும் நிலவு போல 
கலைந்து கனவானது !
நிஜத்தின் பிடியில் 
விதி விளையாடுவதால் !
நிராசையானாலும்
அவளின் நினைவுகள் 
என்றென்றும் 
அவனின் நிழலாக நகரும் 
அவளின் வாசமிருக்கும் வரை !
அவனின் ஸ்வாசமிருக்கும் வரை !

Tuesday 21 March 2017

கனவிலே!!

கால நேரம் பார்ப்பதில்லை
காதல் புரிய நேரமில்லை
கதை பேசும் சுற்றாருடன்
கண்கள் நிறைய ஆர்வத்துடன்
கவிதை தொடுக்க ஆரம்பித்தேன்
கண் முன்னே தெரியும் கயவர்களை பார்த்து !!
எங்கே என்னை கவர்ந்தவன்
கண்டு கொள்வானோ என்ற ஏக்கம் ..
திரும்ப வேண்டும் என்ற ஆவலுடன் 
தேடினேன் திரை மறைவிலிருந்து !!
காரிருளில் மின்னும் மாணிக்கமாய்,
எட்டுத் திக்கும் தேடினாலும்,
எங்கும்  கிடைக்கா அதிசயம் அவன் !
அன்று போல் இன்றும் விலகினாய்,
கடைக் கண் பார்வை மட்டும் போதுமென்று !
மிரளத்தான் முடியும் !
மனதினோரத்தில் 
பசுமரத்தாணி போல்
பதிந்த உன் நினைவுகளை ,
என் பிம்பம்
பாரம் பாராமல்,
உன் கரம் பற்றிய நாட்களை,
கரை படாமல்
காதல் செய்யும்
கனவிலே!