Saturday 6 May 2017

விதை தூவிய
கைகள்
விடை தேடி
போராடுகிறது !
வினா எழுப்பிய
மேடை
பட்டிமன்றமில்லை,
அவையைக் கலைக்க !
நடுத்தெரு தான் !
நேற்று கழிந்த
பொழுதிக்கில்லை
இப்போராட்டம்,
நாளைய கனவுக்கு,
அடுத்த வேளை சோற்றுக்கு,
வரப்போகும் சந்ததிக்கு,
நம்மை தாங்கும்
வறளும் நிலத்திற்காகவும் தான் !
தவிர்க்கும் பதிலை
தலைமை நீ
நிராகரிக்க உரிமையுண்டு !
ஆனால்
மனிதர்களை கேளிக்கையாக்க
உரிமையில்லை !
நிவாரண அறிவிப்பு கொடுக்கும் தலைமைக்கு
நிர்வாணத்தின் வலி அறியாது போலும்!

P.S: என் அலமாரியிலிருந்து 

1 comment:

  1. விவசாயின் வலி வரிகளில் பளிச்சிடுகிறது வாழ்த்துகள்

    ReplyDelete