அந்தி மாலையிலும் சரி
அதிகாலையிலும் சரி
அவளின் நினைவுகளுக்காக
என்றுமே அவன் !
காகிதத்தில்
அச்சடிக்கும் காதலா ?
இல்லவேயில்லை
கல்லில் பதிக்கும்
காவியக் காதல் !
கதைகளில் காணக்கிடைக்காத,
காதலன் நான் !
தற்பெருமை கொண்டேன்,
தேவதை நீ எனக்குதானென்று !
கண்களில்
காதல் பேசிய நீ,
கனவில்
கதை பேசுகிறாய் இன்று !
நேரில்
நிமிர்ந்து பேசிய நீ,
காற்றில்
கசிந்து செல்கிறாய் இன்று !
விதியால்
இணைந்த நாம் !
வீதியில் உன் உயிர் பிரிந்ததே,
என் சொல்வேன் நான்,
கவனம் இல்லையே அன்று,
கண்மணி நீ என்னுடன் இருந்த பொழுது !
காதல் வானில் சிறகடித்த என் மனம்,
கவிதையாய் வடிக்கிறது
உன் நினைவுகளைக் கொண்டு !
அதிகாலையிலும் சரி
அவளின் நினைவுகளுக்காக
என்றுமே அவன் !
காகிதத்தில்
அச்சடிக்கும் காதலா ?
இல்லவேயில்லை
கல்லில் பதிக்கும்
காவியக் காதல் !
கதைகளில் காணக்கிடைக்காத,
காதலன் நான் !
தற்பெருமை கொண்டேன்,
தேவதை நீ எனக்குதானென்று !
கண்களில்
காதல் பேசிய நீ,
கனவில்
கதை பேசுகிறாய் இன்று !
நேரில்
நிமிர்ந்து பேசிய நீ,
காற்றில்
கசிந்து செல்கிறாய் இன்று !
விதியால்
இணைந்த நாம் !
வீதியில் உன் உயிர் பிரிந்ததே,
என் சொல்வேன் நான்,
கவனம் இல்லையே அன்று,
கண்மணி நீ என்னுடன் இருந்த பொழுது !
காதல் வானில் சிறகடித்த என் மனம்,
கவிதையாய் வடிக்கிறது
உன் நினைவுகளைக் கொண்டு !