Tuesday 21 April 2015

அவனின் அவள் !!

அந்தி மாலையிலும் சரி 
அதிகாலையிலும் சரி 
அவளின் நினைவுகளுக்காக 

என்றுமே அவன் !

காகிதத்தில் 
அச்சடிக்கும் காதலா ?
இல்லவேயில்லை 
கல்லில் பதிக்கும்
காவியக் காதல் !
கதைகளில் காணக்கிடைக்காத, 
காதலன் நான் !
தற்பெருமை கொண்டேன்,
தேவதை நீ எனக்குதானென்று !
கண்களில் 
காதல் பேசிய நீ, 
கனவில் 
கதை பேசுகிறாய் இன்று !
நேரில் 
நிமிர்ந்து பேசிய நீ, 
காற்றில் 
கசிந்து செல்கிறாய் இன்று !
விதியால் 
இணைந்த நாம் !
வீதியில் உன் உயிர் பிரிந்ததே,
என் சொல்வேன் நான்,
கவனம் இல்லையே அன்று, 
கண்மணி நீ என்னுடன் இருந்த பொழுது !
காதல் வானில் சிறகடித்த என் மனம்,
கவிதையாய் வடிக்கிறது 
உன் நினைவுகளைக் கொண்டு !