எண்ணங்கள் தான்
மனிதனை உருவாக்கும் !
பால்ய வயதில் ஆரம்பித்து
பருவ வயது வரை
அவன் காணும் காட்சிகள்
அவனின் குணத்தை செதுக்கும் !
பார்க்கும் பார்வையை மாற்றி
சமுதாயம் வளர துணையாய் இருங்கள் !!
சிறார்களையாவது விட்டு வையுங்கள் !
மிருகமாக மாறாதீர்கள்!
தேசத்தை இழிவுபடுத்தாதீர்!!
அறப்போராட்டங்கள் பல புரிந்து,
ஆதரவில்லாமல் பல உயிர்கள் மடிந்து,
அபிப்ராயங்கள் பல கழிந்து,
அஹிம்சா வழியை தேர்வுசெய்து,
ஆங்கிலேயர் ஆட்சி கடந்து,
அரும் பாடுபட்டு
விடுதலை அடைந்த நம் நாட்டின் நிலை,
அந்தோ பரிதாபம் !
பண்பாடு இருந்தாலும்,
பாகுபாடு இல்லை !!
வளர்ச்சியில் போட்டிபோடுகின்றன
பல நாடுகள் ,
நாமோ
ஜாதியில் ஆரம்பித்து,
வீதியிலும் பிரிவினை கோலூற்றுகிறோம்!
வெட்க கேடான செயலுக்கு
வக்காலத்து வாங்கவும் வருவர்
வர்ண கொடிகளை ஏந்தியோர் !
அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும்
அரும்புகளுக்கு கூட சுதந்திரம் கிட்டவில்லை,
சிறார் வேலையிலிருந்தும் சரி!
சில காமுகர்களிடமிருந்தும் சரி !!
சுதந்திரம் கிடைத்துவிட்டதாம்,
நல்ல வேடிக்கை !
பலர் வந்து மேலிடம் சென்றாலும்,
மனிதனின் முற்போக்கு எண்ணத்தின் மாற்றமே
சுற்றுபுறத்தை சுகாதாரமாக்கும் !
சகோதர உணர்வை மேலோக்கும் !
சுதந்திர நாட்டை உருவாக்கும் !!
சரித்திர இந்தியாவையும் படைக்கும் !!