Sunday 18 May 2014

வார இறுதி !!

வார இறுதி
வசந்தத்தின் முடிவு
வருந்ததின் ஆரம்பம் :P

வார இறுதி வந்தாலே  
வாடிக்கை தான்,
கேளிக்கைகளும் வேடிக்கைகளும் !
வாடைக் காற்றோ 
வசந்தக் காற்றோ
வந்து தீண்டினால் போதும் , 
வருத்தங்களை மறந்து,
அலுவல்களை மறந்து,
விந்தையான மானிடர்களை சந்தித்து,
விருப்பமானவர்களின் நேரத்தை களவாடி 
நேசங்களை பரிமாறும் 
வேதனை இல்லா நாட்களே 
சனியும் ஞாயிறும்,
முடியும் தருவாயில் 
முடியக்கூடாதென்ற  ஏக்கமும்
மறுபடியும் குறிப்பேட்டு தாள்களை 
கிழிக்கும் ஆவலில்,
துவங்கும் நாள் தான் திங்கள் !!!

No comments:

Post a Comment