Thursday 23 March 2017

கலைந்த கனவு !!

வெற்று செங்காடாய் தொடங்கிய
அவனின் வாழ்க்கை
வேகமான அவளின் பரிவால்
வானவில்லாக மாறியது !!
விசித்ரமான அனுபவங்கள்
விந்தையான செயல்கள் !
வேடிக்கையான பேச்சுக்கள்!
வழக்கத்திற்கும் மாறாக
அவனை தீண்டும் வசந்தத்தை
வாரிக்கொண்டான் 
வண்ணமலர்கள் என்றெண்ணி!
அவ்வளவு பேரின்பம்
அவளுடன் இருந்தால் !
நிரந்தரமாகக்கூடாதா
நினைத்த நாழிகைகள் பலநூறு !!
நீரில் கரையும் நிலவு போல 
கலைந்து கனவானது !
நிஜத்தின் பிடியில் 
விதி விளையாடுவதால் !
நிராசையானாலும்
அவளின் நினைவுகள் 
என்றென்றும் 
அவனின் நிழலாக நகரும் 
அவளின் வாசமிருக்கும் வரை !
அவனின் ஸ்வாசமிருக்கும் வரை !

1 comment: