உணர்வற்று கிடக்கும் உடம்பில்,
உணர்ச்சிகள் மறையக் கூட
உரித்த நேரம் ஆகும் !
நம்மில் ஒருவராய்
நாதியற்று நடக்கும் போது,
கவனிக்காத இவ்வுலகம் !
நடுக்கடலில் கொல்லப்படும் போது,
கவனிக்கும்!
நடுத்தர மக்கள்,
கவனித்து என்ன பயன் ?
நாடு ஆளும்
தலைவர்கள் கவனிப்பார்களா ?
மாட்டார்கள் !
நந்தினி கொலை,
நெடுவாசல் ஏமாற்றம்,
விவசாயிகளின் தற்கொலை,
எத்தனை போராட்டங்கள்!
எவ்வளவு வேதனைகள்,
எட்டி உதைக்கத்தான்
உரிமை கொடுத்தோம் போல !
இதில் இவர்களின் ,
கட்சி பிரிவினைக் கூத்து வேறு ?
இந்த கூட்டு களவாணிகளின்
சதியால் மடிவோமே தவிர
இனி ஒரு விதி செய்வோமென்பது
கூற்றாக மட்டுமே ஆகும்
இத்திரு நாட்டில் வாழ்ந்தால் !
arumai arumai!!!
ReplyDeleteNandri vignesh
Delete