Tuesday 7 March 2017

உணர்ச்சிகள் !!

உணர்வற்று கிடக்கும் உடம்பில், உணர்ச்சிகள் மறையக் கூட உரித்த நேரம் ஆகும் ! நம்மில் ஒருவராய் நாதியற்று நடக்கும் போது, கவனிக்காத இவ்வுலகம் ! நடுக்கடலில் கொல்லப்படும் போது, கவனிக்கும்! நடுத்தர மக்கள், கவனித்து என்ன பயன் ? நாடு ஆளும் தலைவர்கள் கவனிப்பார்களா ? மாட்டார்கள் ! நந்தினி கொலை, நெடுவாசல் ஏமாற்றம், விவசாயிகளின் தற்கொலை, எத்தனை போராட்டங்கள்! எவ்வளவு வேதனைகள், எட்டி உதைக்கத்தான் உரிமை கொடுத்தோம் போல ! இதில் இவர்களின் , கட்சி பிரிவினைக் கூத்து வேறு ? இந்த கூட்டு களவாணிகளின் சதியால் மடிவோமே தவிர இனி ஒரு விதி செய்வோமென்பது கூற்றாக மட்டுமே ஆகும் இத்திரு நாட்டில் வாழ்ந்தால் !

2 comments: