கால நேரம் பார்ப்பதில்லை
காதல் புரிய நேரமில்லை
கதை பேசும் சுற்றாருடன்
கண்கள் நிறைய ஆர்வத்துடன்
கவிதை தொடுக்க ஆரம்பித்தேன்
கண் முன்னே தெரியும் கயவர்களை பார்த்து !!
எங்கே என்னை கவர்ந்தவன்
கண்டு கொள்வானோ என்ற ஏக்கம் ..
திரும்ப வேண்டும் என்ற ஆவலுடன்
தேடினேன் திரை மறைவிலிருந்து !!
காரிருளில் மின்னும் மாணிக்கமாய்,
எட்டுத் திக்கும் தேடினாலும்,
எங்கும் கிடைக்கா
அதிசயம் அவன் !
அன்று போல் இன்றும் விலகினாய்,
கடைக் கண் பார்வை மட்டும் போதுமென்று !
மிரளத்தான் முடியும் !
மனதினோரத்தில்
பசுமரத்தாணி போல்
பதிந்த உன் நினைவுகளை ,
என் பிம்பம்
பாரம் பாராமல்,
உன் கரம் பற்றிய நாட்களை,
கரை படாமல்
காதல் செய்யும்
கனவிலே!
No comments:
Post a Comment