Saturday 8 March 2014

Happy women's day!!!

நம் முகம் பார்க்க ஏங்கும் முதல் ஜீவன்
நம் கிறுக்கல்களையும் பெருமை படுத்தும் ஒரு ஜீவன்
நம் கோபங்களையும் சிரிப்பால் மறைக்கும் ஒரு ஜீவன்
பல அடைமொழிகள்
நம் வாழ்க்கை யின் நிகழ்வுகள் சுழல்வது
அம்மா என்ற ஒரு பெண்மணியின் மடியில் தான் !


இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!


மங்கையை ஏளனப்படுத்தாதீர் !
அவர்களின் மனம் அறிந்து
பெண்களை போற்றுவீர் !!


வார்த்தைகளை கோர்க்க முடியவில்லை
வசனமாக ..
அவள் மணிகள் அல்லவே
வர்ணிக்க வேண்டாமோ ?
மணிகள் சிதறிய ஒலி போல்
அவள் புன்னகை..
மதி மயங்க வைக்கும்
அவள் பாடல்கள் ..
மனதை வருடி ஏங்க வைக்கும்
அவள் அரவணைப்பு ..
எதிர்பார்க்காமல் அள்ளி கொடுக்கும்
அவள் அன்பு..
ஒரு நொடி பிரியா அவளின் உறுதி ..
ஏசினாலும் நேசிப்பவள் ..
கடிந்தாலும் காதலிப்பவள் ..
யோசிக்க தேவையில்லை
எங்கு சென்றாலும்
அக்கறை என்னும் நிழலாக
இருக்கும் அம்மா வே தான் !!

 

No comments:

Post a Comment