Saturday 22 March 2014

அவனின் அவள் !!

காதலில் கரைந்த இருவரில் ,
ஒருவர் மரணமாக 
காதலியின் மனமோ அவன் வரமாட்டான் எனதெரிந்தும் 
காத்திருக்கிறாள் அவனின் நினைவுகளுடன் 
காதலுக்கு வயதுமில்லை 
மரணமானாலும் என்ற என்ன அலைகளுடன் அவனின் அவள் !!


வேகமாய்  நகரும்  நாட்கள் 
விந்தை  செய்ய  முடியா வண்ணங்களில் 
வகை  வகையான  மலர்கள்  
வாகை  சூட  வரும் வேளை எண்ணி 
வெண்பனி  காலத்திலும்  உன்னை  நினைத்து 
வளர்ந்து  கொண்டிருக்கின்றன  ,
உன்னை  காணும்  ஆவலில் ,
உன்னிடம்  மாலையாகும்  ஏக்கத்தில்  !!
வெயில்  காலத்தில்  வெறிக்கும்  பார்வையில் 
விடைபெற்று  சென்றாய் 
நீ வரும்  நாளுக்காக  வீசும்  அனலிலும் 
உன்னை வரவேற்க   
வஞ்சனை  பாராமல்  விதைகள் தூவினேன் !!
மொட்டு  வெடித்து  மலராகும்  பருவம்  போய் 
மலர்  உலர்ந்து  சருகான  போதும்  நீ  வரவில்லை  !
வீசும் காற்றில் கலந்த நீ 
வரமாட்டாய்  என்றாலும்  
மண்ணாகி  போன  உனக்கு  நான்  உரமாகவது  இருப்பேன் ,
விருப்பமற்ற வாழ்க்கையிலும்,!
உன் வரவை எண்ணி நாட்களை நகர்த்துவேன் ,
என்  காதலில்  தோற்கவில்லை  என்றுரைப்பதற்காக!!

No comments:

Post a Comment