Thursday 13 March 2014

மலரே !!

மலரின் வாசனையில்
நாம் மிதக்கிறோம் 
மலருக்கு என்ன கவலையோ ?

கேட்போம் என்ன தான் என்று !!!

வஞ்சிக்காதே மலரே ,
வண்ணங்கள் பல கொண்டு
வானின் வானவில்
வனத்தில் வந்ததை போல்
என் மனதை கொள்ளை கொள்ளும்
வசீகர நறுமணத்தை கொண்டு
என்னை வசப்படுத்தும் நீ ,
வீணற்ற கோபம் கொண்டு
வாடிவிட்டாயே
ஏன்?
நான் உன்னை சூடியதாலா ?
இல்லை
உன் அமிழ்தத்திற்காகவே
ஏங்கும் வண்ணத்துப்பூச்சியின்
பசி தீர்க்காமல் வந்த வேதனையிலா ??

No comments:

Post a Comment