Monday 10 March 2014

கன்னியின் கள்வன் !!

உன் கரு விழி பார்வையில்
கரைந்தது என் உள்ளம் !
உன் முத்துக்கள் சிந்தும் சிரிப்பில்
முற்றும் மறந்தது என் சிந்தை !


காதலில் விழுந்தோர்,
         கவிகள் ஆகிவிடுவர் !!

காதலனின் நினைவில் காதலியின் எண்ணங்கள் இதோ ...


கால நேரம் பார்ப்பதில்லை
காதல் புரிய நேரமில்லை
கதை பேசும் சுற்றாருடன்
கண்கள் நிறைய ஆர்வத்துடன்
கவிதை தொடுக்க ஆரம்பித்தேன்
கண் முன்னே தெரியும் கயவர்களை பார்த்து !!
எங்கே என்னை கவர்ந்தவன்
கண்டு கொள்வானோ என்ற ஏக்கம் ..
திரும்ப வேண்டும் என்ற ஆவலுடன்
தேடினேன் திரை மறைவிலிருந்து !!
காரிருளில் மின்னும் மாணிக்கம் அவன் !
எட்டுத் திக்கும் தேடினாலும்
அவன் போல் யாரும் இல்லை !
ஆனால்
அன்று போல் இன்றும் விலகினான்
கடைக் கண் பார்வை மட்டும் போதுமென்று !
மருகினேன் ! கசிந்தேன் !
மனதில் பதிந்த அவன் நினைவுகள்
என் பிம்பம்
பாரம் பாராமல்
அவன் கரம் பற்றிய நாட்களை
கரை படாமல்
காதல் செய்கிறது
கனவிலே !

No comments:

Post a Comment