Thursday 4 September 2014

நேரங்கள் !

நட்போ,
ஒரு உறவோ 
எதுவுமே தடங்கல் இல்லாமல் 
அருவி போல் ஒரே மாதிரி செல்ல,
நம் முனைப்பும் அவசியம் !
மற்றவர்களுக்கு முக்கியத்துவமும் அவசியம் !


வீட்டை அடைக்க 
கதவிருக்கும் போது?
என் மனதை அடைக்க 
ஒரு ஜன்னலாவது வேண்டாமோ ? 
உன் குறுஞ்செய்திக்காக,
என் சிறு உள்ளம் ஏங்கிய நேரங்கள் பல !
உன் முகம் காண,
நான் தியாகம் செய்த நிமிடங்கள் பல !
உனக்காகவென்று உருகிய நாட்கள் தான் 
மிச்சமே தவிர,
எனக்கே எனக்கான வேளையில்
என் வேலையைத் தவிர,
கவலையுடன் உன்னை எண்ணி நான்! 
துள்ளி திரியும் வேளையில் 
நிமிர கூட நேரமில்லாமல் 
நகராமல் உன் நினைப்புடன் நான் !
இளமை பிராயத்தின் இன்பமே 
இணைபிரியா தோழிகளுடன் 
இன்முகமாய் இருப்பது தான் !
அருகாமையில் இல்லாதவரை எண்ணி 
இடைவெளியில் இருப்பது அல்ல !
ஒருவரின் அருமை 
பிரிவில் அறிய முடியும் !
நட்பென்பது வரம் 
நேரம் ஒதுக்கு !

No comments:

Post a Comment