Thursday 21 August 2014

கனவுகள் !!

நேசிப்பவர்கள் கூட 
நசுக்கி விடுவார்கள் (சில நேரங்களில்)  நம் மனதை 
நாம் தோற்று விட்டால் !
சகிப்பு தன்மை இருந்தால் மட்டுமே 
சாதிக்க முடியும் !
கலாம் சொன்னது போல் ,
பெரும் கனவு காண்பவர்களும் பெரும் கனவுகள் எப்போதும் அப்பாற்பட்டதாகும்!

கனவு காணுங்கள் நினைவாகும் வரை !

வாழ்கையில் விருப்பங்களில்லால்
ஒருவருமில்லை !
அதுபோல் தான் நானும் !
என் கனவுகளை
நீ விரும்பாமல் இருக்கலாம் !
ஆனால்,
வீசச் சொல்லாதே !
கனவுகள்  காகிதமல்ல,
கசக்கி  எறிவதற்கு   !
காய்ந்து  போன,
மனதின்  குமுறல்கள்  !
சரிந்து  போன,
சரிதத்தின்  சத்தியங்கள்  !
வறண்டு போன,
வாழ்வின்  வினைகள்  !
நகர்ந்து  போன,
நாட்களின்  நினைவுகள் !
நேற்றைய  பொழுது
எனக்கு  கைவிரித்தாலும்,
நாளைய  விடியல்
வழி  காட்டும்,
என்  வாழ்க்கைக்கும்  சரி  !
என்  கனவுகளுக்கும்  சரி  !

2 comments: