Sunday 17 August 2014

நட்புக்காக !!

நண்பர்கள் தினத்தன்று பதிவு செய்ய வேண்டியது !
பழமொழி சொல்வதை போல் 
எவ்வளவு நண்பர்கள் இருப்பது பெரிதல்ல 
எவ்வளவு பேர் வருவார்கள் ஆபத்து என்றால்!
அங்கே தான் தெரியும் நம் நட்பின் ஆழம் எவ்வளவு என்று !
ஆச்சர்யமல்ல மாறி வரும் சுற்றத்தில் 
மனிதர்கள் மாறுவதும் இயல்புதானே? 

அழகான நாட்கள் 
ஆழமான நட்புடன் 
இனிமையான பொழுதுகள் 
ஈரமான மனதுடன் 
உரிமையான சண்டைகள் 
ஊஞ்சலாடிய கனவுகள் 
ஐயமில்லா ஒற்றுமை
எண்ணிலடங்கா நினைவுகள் 
ஏமாற்றமான தருணங்கள் 
ஒருமையான உறவுகள் 
ஓசையில்ல அழுகைகள் 
ஔவை உரைத்த கல்வியுடன் 
கலந்து போன நட்பினை 
எது வந்தாலும் பிரிக்க இயலாது 
காற்றில் கலந்த நீரைப்  போல !!

No comments:

Post a Comment