Thursday 5 March 2015

அவளுக்காக !!!

துள்ளி திரிந்தவளே,
என் உள்ளம் கவர்ந்தவளே !
உனக்காக இக்கவிதை !



மாலை வேளை,

மயங்கும் சூரியன்,
மதி மயக்கும் என்னவளைக் கண்டேன் !
அவள் சென்ற வழி, 
மனம் சென்றது !
அவளை எண்ணி, 
நேரம் கழிந்தது !
தமிழன் மரபு இதுவில்லை தான் , 
தனிமையின் மரபு வேறல்லவே !
தவிர்க்க முடியாமல், 
அவள் குடிலின் மதில் மேல் நான் !
என்னை கண்டு அவள் மிரள, ,
அவளை கண்டு நான் மலைக்க, 
மிரண்ட அவளை நான் தாங்க,
அரங்கேறியது நாடகம் 
இருவரின் விழிகளுக்கிடயே ! 
நேரம் கடந்தது!
பிடி தளர்ந்தது! 
பிடிப்பு அதிகமானது !!!
அறிமுகமில்லா சந்திப்பு, 
அந்தம் வரையிலான உறவென்பதை
சொல்லாமல் சொல்லியது, 
அவளின் வெட்கம் !!

4 comments: