என்றோ எழுதியது,
இன்றைய பதிவு !
சிலரின் தாக்கம் என்றுமிருக்கும்
என்பதன் எடுத்துக்காட்டு !
இதமான காற்றின் தாக்கத்தில்,
இன்பமான ஊர்தி பயணம்,
இல்லம் நோக்கி !
பக்கத்துக்கு இருக்கையில்,
பல் போன பாட்டி!
பழைய காலம் வேறு,
பயத்தில் பேசுவதை தவிர்த்தேன் !
இடைவேளை நிறுத்தம்தான் ,
எங்களின் இணைப்பு !
அன்னியோன்யமான அன்பு ,
அந்நியராயிருந்தாலும்!
உரிமையுடன் உபசரிப்பு ,
அந்த சிறு இருக்கையிலும் கூட !
கண்டு வியந்தேன் !
என்னை எண்ணி மனம் குறுகினேன் !
வார்த்தைக்கு வார்த்தை ,
கடவுள் ஆசிர்வாதம் இருக்கட்டும் !
பழைய மனிதர்கள்
வயதில் மட்டுமல்ல ,
மனதிலும் சரி ,
குணத்திலும் சரி,
பண்பிலும் சரி ,
நாகரீக மோகத்தில் ,
பழசை மறக்காதவர்கள் !
மற்றவரின் மரியாதையும் மறக்காதவர்கள் !
No comments:
Post a Comment