Sunday 29 March 2015

கவிதையே!!

கரைந்த காதலில் 

காதலன் !

காகிதமா,
என் காதல் உனக்கு  !
கண் முன்னே, 
கடந்து செல்லும் நீ 
கவிழ்ந்த முகத்துடன், 
செல்கிறாயே ஏன் ?
கதைகள் பேசி, 
கழிந்த காலங்கள், 
கலங்கடிக்குது என்னை !
கரைகிறது என் மனம்,  
கண்மூடித்தனமான
உன்  நினைவுகளால் !
உறையுது என் இதயம், 
உயிரற்று போன 
உன் நேசத்தைக் கண்டு !
கேள்வி கேட்க ஏதுவில்லை!
கேட்பாரற்று மூர்ச்சையானது 
என்னுடைய காதல், 
இன்று கசியும் என் கண்ணீரில், 
கவிதையாய் மட்டும் நீ!

No comments:

Post a Comment