Friday 25 November 2016

அறிமுகம் !

சிலர் பலர் 
நிறைய மக்கள் உண்டு இந்த வகையில் !
என்னை பொறுத்த மட்டில் 
வாழ்க்கை ஒரு வட்டம் , 
முற்று பெறாதது இறந்த பின்னும் சரி !
சந்திக்கும் மனிதர்கள் ஆயிரம் ,
அனைவர்க்கும் பின்னே சோகங்களுண்டு !
யாருக்குத்தான் இல்லை :)
சிரத்தையெடுத்து சிரிக்க வேண்டும் !
பாகுபாடில்லாமல் பழக வேண்டும் !
இந்த நொடியில் 
முடியும் வாழ்க்கை ! 
வெறுக்காதே எவரையும்,
நேசிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை !



சிலரின் பெயர்
போதும்
அவளின் முகம் 
பிரகாசமாக ! 
சிலரின் அறிமுகம் 
போதும் 
அவளின் மனம்
விசாலமாக !
சிலரின் நிழல் 
போதும் 
அவளின் நினைவுகள் 
கரைய !

No comments:

Post a Comment