Saturday 12 July 2014

தன்னம்பிக்கை !!

சிறு இடைவெளிக்கு பிறகு 
என் சிறிய பதிப்பு 
தன்னம்பிக்கை இழந்தவன் 
தும்பிக்கை இழந்த யானை போல் . 
தவறு செய்வது இயல்பு 
திருத்தி கொள்வது இயற்கை 
அது போல் தான் 
காலம் யாரையும் மாற்றும் .. 
நம்பிக்கை வைக்கலாம் 
கடுகளவு போதுமே !!!


துயரம் யாருக்குத் தான் இல்ல
மாட்டிற்கும்  இருக்கிறது 
வெட்டுகிறார்கள் என்று... 
மனிதனுக்கும்  இருக்கிறது 
விட்டுப்போகிறார்கள் என்று.. 
துவண்டபோது யாரும் வரவில்லை..
தூக்கி நிறுத்தவும் யாரும் வரப்போவதில்லை... 
யாரையும் நம்பாதே 
உன் தன்னம்பிக்கையை தவிர..
தன்னல்முள்ள ஜீவனாக மாறு,
தடைகளை தகர்த்தெறி, 
தீஞ்சுவாலை போல் 
விரைவாகள் முன்னேறு.. 
திசையெங்கும் உன் புகழ் பரவும்!
திகைத்துப் போவர்
 உன்னை இழிந்தவர்கள் !!

No comments:

Post a Comment