Thursday 26 June 2014

குடிமகன்

இல்லறம் இனிமையில் , 
மனம் மட்டும் ஒத்திருந்தால் போதாது 
பழக்கமும் மாற வேண்டும் !

பத்து பாத்திரம் தேய்த்து 
பெற்ற பிள்ளைகளை, 
பேணும் பேதை அவள், 
இல்லறத்தில் இன்பத்துக்கு பஞ்சமில்லை!
துணைவனும் தூர் வாருகிறான்,
துயரில்லாமல் காப்பாற்றுகிறான் !
வலி போக்கும் நிவாரிணி ,
வலிய வந்தது விளம்பரம் !
மலிவு விலையில் வந்த வினை , 
இல்லறத்தில் வேதனை !
விகல்பமில்லா ஒருவனின் ,
விதியின் சதியா
இல்லை 
மதியின் கதியா 
வீழ்ந்து கிடக்கிறான் !!!
வீதியில் தன்பதியை தவிக்கவிட்டு !!!

No comments:

Post a Comment