Tuesday 3 June 2014

மனிதநேயம்

இக்கவிதையின் ஆரம்பம், தாம்பரம் ரயில்நிலையத்தில் ஆரம்பித்தது !வருடங்கள் உருண்டோடினாலும்,பசியால் துடித்த மூதாட்டியை மறக்க இயலவில்லை !பசியென்று கதறிய ஜீவனை,கண்ணெடுத்தும் பார்க்கவில்லை எவரும் !எந்த கடையும் அருகில் இல்லை !பசிவேதனை எனக்கும் தான்,தேநீரும் தேவர்மிதமாகும்,பசியின் கோரப்பிடியில் சிக்கியவர்களுக்கு !!அன்று தான் உணர்ந்தேன் !!குல்லாவும் (winter )ஒரு பிஸ்கட் கட்டும் கொடுத்து வந்தேன் !மனம் நிறையவில்லை !பாரத்துடன் திரும்பி வந்தேன் !கடவுளின் படைப்பை எண்ணி !மனிதனுக்கு இதயம் உண்டு ஆனால்இயந்திரமயமானவர்களுக்கு  எங்கே இதயம் உள்ளது????



சாலையோரத்தில்
கீழேகிடக்கும்
கற்களைக் கண்டாலே
ஒதுங்குபவர்கள் ,
கலங்கி நிற்கும்
வாழ்விழந்த ஜீவன்களையா ,
இல்லை!
வலுவிழந்த மனங்களையா
கண்டுகொள்வார்கள் !!
இல்லவே இல்லை !
மனிதநேயம்
மனிதருள் மரத்துவிட்டது
மற்புதிரில் மறைந்திருக்கும்
கற்கள் போல ! 

No comments:

Post a Comment