அகதிகள் தினத்திற்காக எழுதியது !!
பரந்த உலகில்
அனைவருக்கும் இடமுண்டு !
சிலருக்கு சொந்த நிலம் !
பலருக்கு வந்தடைந்த நிலம் !
அவர்கள் தான் அகதிகள் !!
ஆறுதல் படுத்த இயலாது
அதனால் என் அனுதாபங்கள் !!
தாலாட்டு பாடும்
தாயுடன் வாழ்ந்த நாட்கள் போய்,
தலை கோதும்
தந்தையுடன் இருந்த நாட்கள் போய்
சமரச படுத்தும்
தனயனுடன் செலவிட்ட நாட்கள் போய்
அருமை தோழிகளுடன்
ஆடி பாடிய காலங்கள் போய்
அயராது உழைத்தாலும்
துயரமில்லா கழிந்த நாட்கள் போய்
அகத்துக்காரரின் அன்பால்
சுற்றம் மறந்த நாட்கள் போய்
அன்பு ! ஆசை !
பண்பு ! பண்பாடு ! பந்தம் !
எல்லாம் மறந்து போய்
வீட்டை விட்டு ,
ஏன் நாட்டையே விட்டு ,,
வயிற்றுப் பிழைப்புக்காக,
நாய் படாத பாடு படும்
நான் மட்டும் தான் அகதியா,
இல்லை நீங்களுமா ?
பரந்த உலகில்
அனைவருக்கும் இடமுண்டு !
சிலருக்கு சொந்த நிலம் !
பலருக்கு வந்தடைந்த நிலம் !
அவர்கள் தான் அகதிகள் !!
ஆறுதல் படுத்த இயலாது
அதனால் என் அனுதாபங்கள் !!
தாலாட்டு பாடும்
தாயுடன் வாழ்ந்த நாட்கள் போய்,
தலை கோதும்
தந்தையுடன் இருந்த நாட்கள் போய்
சமரச படுத்தும்
தனயனுடன் செலவிட்ட நாட்கள் போய்
அருமை தோழிகளுடன்
ஆடி பாடிய காலங்கள் போய்
அயராது உழைத்தாலும்
துயரமில்லா கழிந்த நாட்கள் போய்
அகத்துக்காரரின் அன்பால்
சுற்றம் மறந்த நாட்கள் போய்
அன்பு ! ஆசை !
பண்பு ! பண்பாடு ! பந்தம் !
எல்லாம் மறந்து போய்
வீட்டை விட்டு ,
ஏன் நாட்டையே விட்டு ,,
வயிற்றுப் பிழைப்புக்காக,
நாய் படாத பாடு படும்
நான் மட்டும் தான் அகதியா,
இல்லை நீங்களுமா ?
No comments:
Post a Comment