நான் சுவாசிப்பதே
உன்னை நேசிக்கத்தான்
என்று காதல் மொழி பேசும்
என்னவளின் ஏக்கமான
வரிகள் !!
மழையின் வரவுக்காக
ஏங்கும்
நிலம் போல,
உன் வரவுக்காக
ஏங்கும்
என் விழிகளும்
வறண்டு கொண்டிருக்கிறது
எதிர்பார்ப்புகளை
கண்ணீரில் கரைத்து!
பூவரம்பின் வரவுக்காக
வாடும்
செடி போல ,
என் மனமும்
வாடிக் கொண்டிருக்கிறது
நினைவுகளை
கனவுகளில் சேர்த்து!
தென்றலின் வரவுக்காக
ஏங்கும்
சோலை போல,
என் இதயமும்
ஏங்கிக் கொண்டிருக்கிறது
நம் காதலை
உயிர்நாடியில் சுவாசித்து!!
No comments:
Post a Comment