Thursday 12 June 2014

குழந்தை தொழிலாளர்கள்!!


குழந்தையின் வருமானம் 
நாட்டுக்கு அவமானம் !(படித்ததில் பிடித்தது )
ஒரு பெண் குழந்தையின் 
ஆதங்கம் கீழே !!

என்  வரவை  எண்ணி 
நீ  காத்திருந்த   நேரங்கள் ,
என் முகம் பார்த்து 
நீ அழுத நிமிடங்கள்,
என் கரம் பிடித்து 
நீ கூட்டிச் சென்ற  நாட்கள் ,
என் மனம் முழுக்க 
நீ ஊட்டிய நம்பிக்கை ,
வறுமையிலும் ,
வசந்தத்தை காட்டினாய் !
வஞ்சனையில்லா அன்பினால்  
வாஞ்சை கொண்டேன் உன் மேல் !
சச்சரவில்லா வாழ்வில், 
நுழைந்தது விதி !
நீ வினையினால் படுத்த படுக்கையானாய் !
நானோ வீதியில் விளையாடாமல் ,
துணிகளை வெட்ட ஆரம்பித்தேன்,
வயதுக்கு வராமலே !


P.S:தவறு இருந்தால் கருத்துக்களில் பதிவு செய்யவும் !

No comments:

Post a Comment