குழந்தையின் வருமானம்
நாட்டுக்கு அவமானம் !(படித்ததில் பிடித்தது )
ஒரு பெண் குழந்தையின்
ஆதங்கம் கீழே !!
என் வரவை எண்ணி
நீ காத்திருந்த நேரங்கள் ,
என் முகம் பார்த்து
நீ அழுத நிமிடங்கள்,
என் கரம் பிடித்து
நீ கூட்டிச் சென்ற நாட்கள் ,
என் மனம் முழுக்க
நீ ஊட்டிய நம்பிக்கை ,
வறுமையிலும் ,
வசந்தத்தை காட்டினாய் !
வஞ்சனையில்லா அன்பினால்
வாஞ்சை கொண்டேன் உன் மேல் !
சச்சரவில்லா வாழ்வில்,
நுழைந்தது விதி !
நீ வினையினால் படுத்த படுக்கையானாய் !
நானோ வீதியில் விளையாடாமல் ,
துணிகளை வெட்ட ஆரம்பித்தேன்,
வயதுக்கு வராமலே !
P.S:தவறு இருந்தால் கருத்துக்களில் பதிவு செய்யவும் !
No comments:
Post a Comment