Saturday 14 June 2014

தந்தை!!

வார்த்தைகளால் கூற முடியாது 
நம் பெற்றோரின் நேசத்தை !
தாயின் பாசம் பலவாறு வெளிப்படும் !
ஆனால் தந்தையின் பாசம்
நம் பரிமாணங்களில் வெளிப்படும் !!


அளவான பேச்சும், 
ஆரவாரமில்ல அனுசரணையும் ,
இயல்பான நடத்தையும், 
ஈகைப் பண்பும்,
உரிமையுடன் உதவும், 
ஊராரை விமர்சிக்காமலும், 
எழுச்சிமிகு எண்ணங்களும் ,
ஏச்சுகளை பேசாமலும்,
ஐக்கியம் வளர்த்தலும்,
ஒவ்வாமை தவிர்த்தலும், 
ஒக்கமாய் வளர்தலும்,
ஔவியம் தவிர்க்கவும்,
அஃரினைகளையும் மதிக்கவும் ,
கற்றுத் தந்த 
கடவுளான என் தந்தைக்கு, 
"தந்தையர் தின வாழ்த்துக்கள்"

No comments:

Post a Comment