Tuesday 10 June 2014

போராட்டம் !

வாழ்க்கை வருபவர்களுக்கெல்லாம் வசந்தமல்ல !!
வறுமையில் வாழ்பவர்க்கு, 
நித்தம் ஒரு போராட்டம் 
ஒரு வேலைகஞ்சிக்கு  
எப்படி பணம் சேர்ப்பதென்று  ?
செல்வத்தில் திளைப்பவரகளுக்கும்  
போராட்டம் தான் 
எப்படி பாதுகாப்பது ? 
எப்படி பெருக்குவது ?
இருப்பவர்களுக்கு ஒரு கவலை !
இல்லாதவர்களுக்கு ஒரு கவலை !


போராட்டமான வாழ்க்கையில்
போராளிகளாகிய நாம் சந்திக்கும்
போராட்டங்கள் ஆயிரம்
போராளிகள் பல்லாயிரம்
போட்டியைக் கண்டு முடங்கிவிடாதே
போராடு போட்டி போடு
பொறாமை கொள்ளாதே!
பக்குவமாய் செயல்பாடு
பதற்றம் அடையாதே!
சிந்தித்து செயல்படு
சினங்கொண்டு எறியாதே !!
மனதாரப்  பாராட்டு
மனதில் வைத்து பேசாதே !!
இயன்றவரை உதவி செய்
இயலாதவரை கேலி செய்யாதே !!
ஊக்கத்துடன் முன்னேறு
ஊதாரியாகத்  திரியாதே!!!
எண்ணங்கள் பல
திண்ணத்துடன் செயல்படு
வருங்காலத்தை
கேள்விக்குறி ஆகாதே
வர்ணங்கள் நிறைந்த
வானவில்லாக மாற்று!!!!!




P.S: என் அலமாரியிலிருந்து !!

No comments:

Post a Comment