Monday 23 June 2014

இழப்பின் வலி !!

நேரம் வந்தால் செல்லும் உயிர்
நீ அவசரத்தில் எடுக்கும் முடிவு 
உன் உயிரை பறிக்கலாம்!
ஆனால் உன் நினைவுகள் 
அடங்கா துயர் தரும் !
தனிமையை உணர்ந்தால் 
தாயிடம் கூறு !!
அவள் உணர்த்துவாள் 
உண்மையான அன்பை !!
தந்தையிடம் கூறு 
அவர் விவரிப்பார் 
வாழ்க்கையின் மகத்துவத்தை !!

தெரிந்தவர்களின் தற்கொலையின் பாதிப்பின் பதிப்பு இங்கே!!


பிறப்பின் வாசலில்
உன்னை வரவேற்க
பெருமிதத்துடன் உன் தந்தை,
எதிர்பார்ப்புடன் பந்துக்கள் ,
பிரார்த்தனையுடன்
உன் பிஞ்சு முகத்தை பார்க்க 
ஆனந்தக் கண்ணீருடன் உன் தாய் ,
பாரங்கள் பல இருந்தும்
உன்னை எண்ணிக்கொண்டு ,,
மனசெல்லாம் பூரிப்புடன்
உன் வளர்ச்சியை எண்ணி எண்ணி,
களிப்புடன் நீ விரும்பியவற்றை
வலி யை மட்டுமே கூலியாகக் கொடுத்து, ,
உன் விழியில் ஈரத்தை
 பார்க்கக் கூடாதென்றெண்ணும்
கடவுளுக்கு நிகரான
பெற்றவர்களை சிந்தித்து பார் ,
நீ விபரீத முடிவின்
  விளிம்பிலிருக்கும் பொழுது ,
காரணங்கள் பல கூறலாம்
வேலைப் பளு,
நண்பர்கள் பிரிவு,
காதல் முறிவு,
நீ சென்று விடுவாய் உலகை விட்டு,
உன்னை மரண வாசலுக்கு அனுப்பிவிட்டு
நிர்க்கதியாகி நித்தம்
உன் நினைவுகளுடன்,
நடைபிணமாய்
வாழப் போவது உன்னை பெற்றவர்கள் மட்டுமே !!

No comments:

Post a Comment