Tuesday 31 January 2017

விதியின் வழி !!!

நூறு நிமிடங்களும்,
கடந்தது பெண்னே
நின் நினைவு 
நொடி கூட
குறையவில்லை !
நேற்று பெய்த
நடுஜாம 
மழையின் ஈரமும் 
குறையவிலை !
என் கண்ணில்
துளிர்க்கும் 
கண்ணீரின் 
அளவும் 
குறையவில்லை !
உன்னால் 
நிலைகுலைந்தேனடி !
உன் நினைவால்
மதி இழந்தேனடி !
நீ பிரியாவிடை
பெற்று சென்றாயடி !
பிரிக்க மனமில்லாமல் ,
மறக்க விருப்பமில்லாமல்,
நீ என்னுள் வசிக்கிறாய்!
சூழ்நிலை எதிரியானது!
நம் வாழ்க்கை புதிரானது !
நெஞ்சமெல்லாம் நீயே !
மஞ்சம் தேவையில்லை மணியே !
உன் காதலில்
நான் மட்டுமே இருந்தது போல், 
உன் கல்லறையிலும்,
நான் மட்டுமே இருக்க விழைகிறேன்,
என் காதலியே !

6 comments: