Sunday 25 December 2016

தென்றல்!

என்னவளின்
கேசத்தை வருடுபவள்,
தாயைப் போல !
தேகத்தை தேற்றுபவள்,
தோழியைப் போல !
உரிமையோடு இருப்பவள் ,
உருவமற்றவள்!
நாளும் இருப்பவள்,
நாடோடி அவள் !
யார் அவள் ? 
மிருதுவான இசையில் 
மனதை மஞ்சமாக்கி 
சிலிர்ப்படைய செய்யும்
தென்றல் தான் அவள் !
பெருமையாய் பேசினாலும்  
பொறாமை தான் !
நான்  மட்டுமே 
நேசித்து சிலாகிக்கும் 
என்னவளின் 
சுவாசத்தையும் 
அபகரக்கிறாளே!!

என்னவள் நேசம் மட்டுமில்லை
ஸ்வாசுமமும் எனக்கு மட்டுமே !

No comments:

Post a Comment