Thursday 15 December 2016

காதலா !


காலங்கள் கடந்தாலும்
காதல் கரையாது 
கவனிப்பாரற்று கிடந்தாலும் கூட !


சலனமில்லா வாழ்க்கையில் 
சரீரங்கள் காணாத 
மழைச்சாரலை போல் 
வந்த அவன்  !
அவள் சிந்தனைகளை 
சிறகடிக்க வைத்த அவன்  !
அவள் ஸ்பரிசத்தை 
சிலிர்க்க வைத்த அவன்   !
அவள் சோகங்களையும் 
சிரிப்பாக்கிய அவன்  !
சென்று விட்டான் !
இன்று அவளுடனில்லை !
சல்லாபிப்பதும் இல்லை !
சந்திப்பதும் இல்லை !
விலகிவிட்டான் !
விதியினால் விலகினானோ?
விருப்பப்பட்டானோ ? 
எவரும்  அறியவில்லை !
அவன் விலகினாலும்,
அவன் தூவிய விதை 
அவள் மனதிலிருந்து நீங்காது ! 

No comments:

Post a Comment