காலங்கள் கடந்தாலும்
காதல் கரையாது
கவனிப்பாரற்று கிடந்தாலும் கூட !
சலனமில்லா வாழ்க்கையில்
சரீரங்கள் காணாத
மழைச்சாரலை போல்
வந்த அவன் !
அவள் சிந்தனைகளை
சிறகடிக்க வைத்த அவன் !
அவள் ஸ்பரிசத்தை
சிலிர்க்க வைத்த அவன் !
அவள் சோகங்களையும்
சிரிப்பாக்கிய அவன் !
சென்று விட்டான் !
இன்று அவளுடனில்லை !
சல்லாபிப்பதும் இல்லை !
சந்திப்பதும் இல்லை !
விலகிவிட்டான் !
விதியினால் விலகினானோ?
விருப்பப்பட்டானோ ?
எவரும் அறியவில்லை !
அவன் விலகினாலும்,
அவன் தூவிய விதை
அவள் மனதிலிருந்து நீங்காது !
No comments:
Post a Comment