Tuesday 20 December 2016

அம்மா!

அம்மா
ஒற்றை வார்த்தையே 
               கவிதை தான் !
விவரிக்க முடியா 
               அற்புதம் நீ!
நித்தம் எங்கள் வாழ்வில் 
வண்ணம் தீட்டும் 
              வானவில் நீ !
உன் அருகில் இல்லாமை
             ஒன்றே குறை, 
அதையும் தீர்ப்பாய் 
            மணிக்கொரு  முறை 
உன் அழைப்பால்!
நாங்கள் உதாசீன படுத்தினாலும் ,
உன் முகத்தில் 
           புன்னகை மட்டுமே! 
அது நீ பிறந்த நாளான 
இன்று மட்டுமல்ல 
என்றுமே தவழ 
விழையும் உன் உயிர்நாடிகள் !



உனக்குள் உயிராய் வந்த நாங்கள்,
உனக்காக என்றுமே  உயிராய் இருப்போம் !

1 comment: